Search This Blog

Sunday 22 April 2012

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்


ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அல்லாஹ்வின் வல்லமையை நாம் சிந்திப்பதில்லை இதைப்பற்றி சிந்திக்க முற்பட்டுவிட்டால் இணைவைத்தலை தவிர்த்து அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடக்கூடிய இறைவிசுவாசியகாகவும் அல்லாஹ்வுக்கு உண்மையான அடியானாகவும் மாறிவிடுவோமே!
நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)

மேற்கண்ட வசனத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியவை
  1. நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம்.
  2. இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்!
  3. பின்னர் அலக் என்பதை ஒரு தசைப் பிண்ட மாக்கினோம்!
  4. பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்!
  5. பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!
  6. பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்!
மேற்கண்ட இந்த ஆறு அம்சங்களையும் ஒவ்வொன்றாக அலசுவோம் வாருங்கள்

ஆண் விந்துத் துளி பற்றிய அறிய தகவல்கள்
ஒரு ஆணிடமிருந்து வெளிப்படும் ஒருவகையான நீர் விந்துத்துளி என்று அறிவியல் உலகம் வர்ணிக்கிறது. இந்த விந்துத்துளியைப் பற்றி 1400 வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ் அருள்மறையில் குறிப்பிட்டள்ளான் இதைப் பற்றி அருள்மறை பின்வருமாறு கூறுகிறது
ஆகவே மனிதன், (தான்) எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்து பார்க்க வேண்டாமாகுதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் கடைசி நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது. (அல் குர்ஆன்: 86:5-7)
இதோ மேலே காணும் படம் ஒரு ஆண் மகனுடைய விந்தணுவாகும் இது உருவாக 74 நாட்களாகிறது என்றும் விந்து நீரில் 100-300 மில்லியன் விந்தணுக்கள் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பெண்ணின் சினைமுட்டை பற்றிய அறிய தகவல்கள்
பெண்ணின் சினை முட்டையின் வடிவம் 0..2 மி.மீ அளவு கொண்டது என்றும் இந்த சினை முட்டை வட்ட வடிவமுடையது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இதோ மேலே கண்ட படம் பெண்ணின் சினை முட்டையாகும் இதை சற்று கவனித்துப் பாருங்கள் இது முட்டையைப் போன்று வட்ட வடிவமாக காணப்படுவதால் இதற்கு சினை முட்டை என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது!
பெண்ணின் சினைமுட்டையானது அவளுடைய சினைப் பையிலிருந்து வெளியாகிறது என்றும் இந்த சினை முட்டையின் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் என்றும் மேலும் இந்த சினை முட்டை சினைப் பாதையின் புறச் சுவர்களால் உறிஞ்சப்பட்டு சினைப்பையை அடைகிறது ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.


விந்தணுவும் சினைமுட்டையும் ஒன்றுடன் ஒன்று சேருகிறது
ஒரு ஆணுடைய விந்தணு ஒவ்வொருமுறை உறவு கொள்ளும்போதும் அவனிடமிருந்து 2-4மிலி விந்து நீர் வெளிப்படுகிறது இந்த விந்து நீரில் உள்ள விந்தணு 0.5 மி.மீ நீளம் உடையது. இதோ விந்தணுவின் படத்தை சற்று கவனியுங்கள்
இந்த ஆணுடைய விந்துநீரிலிருந்து வெளிப்படும் விந்தணு பெண்ணுடைய சினைப் பையிலிருந்து வெளியாகும் சினை முட்டையுடன் கூடுகிறது! ஆணுடைய விந்தணு எவ்வாறு பெண்ணுடைய சினைமுட்டையுடன் கூடுகிறது என்ற நிகழ்ச்சியை படமாக விளக்கியுள்ளேன் கீழே உள்ளதை பாருங்கள்
பெண்ணுடைய சினைப் பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்ட நேரம் முதல், சினைப்பாதையில் நகர்ந்து வர 2 நாட்கள் ஆகும். மேலும் சினைமுட்டை வெளிவந்து 24 மணி நேரத்திற்குள் விந்தணு சினைமுட்டையை அடைய வேண்டும். இவ்வாறு நுழையும் விந்தணு கருப்பையில் 10 நாட்கள் வரை உயிர்வாழும் என்றும் மேலும் இந்த ஆணின் விந்தணு 24-48 மணி நேரத்தில் ஒரு பெண்ணை கருத்தரிக்கச் செய்யும் சக்தியை இழந்து விடுகிறது என்றும் அதே போன்று பெண்ணின் சினைமுட்டையின் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இதன் மூலம் நாம் விளங்குவது என்னவெனில் ஆணுடைய விந்தணு பெண்ணுடைய சினைமுட்டையுடன் 24 மணிநேரத்திற்குள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு கருத்தரிக்க வைக்க வேண்டும் என்பதே!
ஆணுடைய விந்தணுவிலிருந்து 23 குரோமோசோம்களும் பெண்ணின் சினைமுட்டையிலிருந்து 23 குரோமோசோம்களும் ஒன்றாக இணைந்து செல் அமைப்பாக உருவாகிறது இந்த செல் அமைப்பு உப்பு போன்று காணப்படுகிறது. இதுதான் FERTILIZED EGG அதாவது கருமுட்டையாகும்
கருமுட்டை கர்பப்பை குழாய் எனப்படும் FALLOPIAN TUBE வழியாக கருப்பையில் சென்றடைகிறது பின்னர் கர்ப்பப் பை படிப்படியாக வளர ஆரம்பிக்கிறது இந்த வளர்ச்சியை கீழே உள்ள படத்தின் உதவியால் காண இயலும்!
பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!
மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்
  • ஒரு பெண் கர்ப்பம்தரித்த 21 அல்லது 24-ம் நாளிலிருந்து அந்த கருவுக்குள் இதயத்துடிப்பு நிகழ்கிறது இதன்மூலமாக அந்த கருவுக்குள் இரத்த ஒட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது
  • கர்பம்தரித்த 28ம் நாள் முதல் அந்த கருவுக்குள் கை, கால்கள், காதுகள் மற்றும் முதுகுத்தண்டுவடம் ஆகியன துளிர்விடுகின்றன.
  • கர்ப்பம் தரித்த 30ம் நாள் கருவுக்குள் மூளை துளிர்விடுகிறது
  • கர்ப்பம் தரித்த 35ம் நாள் விரல்கள் துளிர்விடுகின்றன
  • கர்ப்பம் தரித்த 40ம் நாள் மூளை செயல்பட ஆரம்பிக்கிறது
  • கருவுற்ற 6-வது வாரம் முதல் கருவின் மூளை கருவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது.
  • கருவுற்ற 7-வது வாரம் முதல் பற்களின் தாடைகள் துளிர்விடுகின்றன மேலும் பால்பற்கள் முளைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன
பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்
மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்

  • கருவுற்ற 8-வது வாரத்தில் கரு மனித உருவத்தில் தென்படுகிறது மேலும் அனைத்து அங்கங்களும் உறுப்புக்களும் கண்டறியப்படுகிறது
  • கருவுற்ற 9-வது வாரத்தில் குழந்தையின் கை விரல்களில் ரேகைகள் படர ஆரம்பிக்கிறது பின்னர் குழந்தை தன் விரல்களை அசைக்க முற்படுகிறது
  • கருவுற்ற 10-வது வாரத்தில் குழந்தை கர்ப்பப் பையில் உள்ள அமிலங்களை பருக முற்படுகிறது
  • கருவுற்ற 11-வது வாரத்தில் குழந்தை உறங்க கற்றுக் கொள்கிறது பிறகு விழிக்க கற்றுக்கொள்கிறது இறுதியாக சிறுநீர் கூட கழிகக் ஆரம்பிக்கிறது. அதே சமயம் சுவாச உறுப்புகளை இயக்குவதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் இந்த குழந்தை பயிற்சி எடுக்கிறது!
  • கருவுற்ற 13-வது வாரத்தில் குழந்தையின் மர்மஸ்தான உறுப்புகள் தெரிய ஆரம்பிக்கின்றன மேலும் நாக்கில் ருசியை அறியக்கூடிய நரம்புகள் வேலை செய்கின்றன.
  • கருவுற்ற 14-வது வாரத்தில் குழந்தையின் செவிப்புலன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது.
  • கருவுற்ற 17-வது வாரத்தில் கண்களில் அசைவுகள் தென்படுகின்றன. குழந்தை கனவு காண முற்படுவதாக அறிவியல் வல்லுனர்கள் தங்கள் ஆய்வில் கூறுகிறார்கள்.
  • கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது தாயின் வயிற்றினுள் ஏற்படக்கூடிய சப்தங்களை காது கொடுத்து கேட்கிறது!
  • கருவுற்ற 5-வது மாதத்தில் குழந்தையின் அசைவுகள் நன்றாக வெளிப்படுகின்றது.
  • கருவுற்ற 6-வது மாதத்தில் வியர்வை சுரப்பிகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் உடலில் முடிகள் முளைப் பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன
  • கருவுற்ற 7-வது மாதத்தில் விழிகள் திறந்து மூடுகிறது, குழந்தை சுற்றுமுற்றும் பார்க்கிறது, சுவையை அறிகிறது, தாயின் கர்ப்பப் பையை மெதுவாக தொட்டு உணருகிறது.
  • கருவுற்ற 8-வது மாதத்தில் குழந்தையின் மிருதுவான தோல் சருமங்கள் சற்று மேம்பட ஆரம்பிக்கிறது.
  • கருவுற்ற 9-வது மாதம் அதாவது 266 அல்லது 294ம் நாள் தன் கருவளர்ச்சியை முழுவதுமாக அடைந்து குழந்தை இந்த உலகில் காலடி எடுத்துவைக்க தயாராகிவிடுகிறது.
மேலே தாங்கள் கண்ட அனைத்து அறிவியல் அதிசயங்சளையும் கீழ்கண்ட அருள்மறை குர்ஆனின் வசனம் மெய்ப்படுத்துகிறதா? என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்
நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத்துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)


நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இஸ்லாத்திற்குள் வாருங்கள் அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!

Friday 20 April 2012

குடும்ப உறவில் மலரும் இஸ்லாம்



Inline images 2
குடும்ப உறவு என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட புனிதமிக்க உறவாகும். அதில் சில சந்தர்ப்பங்களில் சலசலப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருந்தாலும், அதன் மூலம் இறைவன் உறவின் வலிமையை மேலும் பலப்படுத்தி விடுகின்றான். ஆனால் நம்மில் சிலர் குடும்ப உறவில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்னைகளை பெரிதுபடுத்தி பல்லாண்டுகள் நீடித்து அப்புனித உறவை ஒரே நாளில் சிதைத்து விடுகின்றார்கள். அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.
ஒரு ஆண் தனது ஆண்மையை இழந்து விட்டாலும் பெண் அவனுடன் சகிப்புத்தன்மையோடும், பொறுமையோடும் வாழ முடிவு செய்கிறாள். அதேசமயம் யார் மீது குறை என்பது நிரூபிக்கப்படாத நிலையில் இருந்தால் பெண்ணின் மீதே பழி சுமத்தி ஆண்கள் தம்மை குறையற்றவர்களாக காட்டிக் கொள்ள முனைகிறார்கள்.
மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவியரிடத்தில் எப்படி வாழ்ந்திருக்கிறார்கள் என்று ஆராயும் போது அவர்கள் சமுதாய அரங்கில் மிகப் பெரிய அந்தஸ்துள்ளவர்களாக இருந்த போதும் வீட்டுக்கு வந்து விட்டால் மிகச் சிறந்த கணவராக மாறி விடுவார்கள். சமையல் உட்பட அனைத்திலும் மனைவியர்களுக்கு உதவி புரிவார்கள்.
ஆண்களைப் பார்த்து அல்லாஹ்வும் பின்வருமாறு கூறுகிறான் :
அப் பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை வெறுத்த போதிலும் (பொறுமையோடிருப்பீர்களாக. ஏனெனில்) ஒரு பொருளை நீங்கள் வெறுக்கக் கூடும். (ஆனால்) அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருப்பான் (அல்குர்ஆன் 4:19)
பெண் ஆணின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான். அதனால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் : பெண்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லிக் கொண்டே இருங்கள். ஏனெனில் அவர்கள் விலா எலும்பினால் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரேசமயத்தில் அதை நேராக்க முயன்றால் உடைந்து விடும். அப்படியே விட்டு விட்டால் வளைந்த வடிவத்திலேயே இருக்கும். (நூல்: புகாரீ)
தன்னுடைய மனைவியிடத்தில் காணப்படும் வெறுப்புக்குரிய விஷயத்தை எவ்விதம் கையாள்வது என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது,
ஒரு முஃமின் தன்னுடைய மனைவியிடத்தில் ஏதேனும் ஒரு குணம் பிடிக்கவில்லையென்றால் அவள் மீது கோபப்பட மாட்டான். மாறாக மற்றொரு புறத்தைக் கொண்டு திருப்தியடைந்து கொள்வான். (நூல்: முஸ்லிம்)
ஒரு ஆணுக்கு தன் மனைவியின் மீது குற்றம் கூற உரிமை இருப்பது போலவே பெண்ணுக்கும் இருக்கிறது. நபித்தோழியர்களான பெண்கள் அச்செயலையும் இஸ்லாமிய அடிப்படையில் எப்படி அணுகி இருக்கின்றார்கள் என்பதை பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.
அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
”நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருக்கும் போது ஒரு பெண்மணி வருகை தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தன் கணவரைப் பற்றி மூன்று புகார் கூறினார்.
யாரசூலுல்லாஹ் என் கணவர் ஸஃப்வான் நான் தொழுதால் அடிக்கிறார். நோன்பு வைத்தால் விட்டு விடச் சொல்கிறார். சூரியன் உதயமாகும் பஜ்ர் தொழுவதில்லை. இந்த புகாரைக் கூறும் போது ஸஃப்வானும் அந்த சபையில் இருந்தார். ‘என்ன ஸஃப்வானே! உன் மனைவி கூறுவது உண்மைதானா?’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட போது அவர் ஆம் எனக் கூறிவிட்டு, அதற்குரிய காரணத்தைச் சொல்லத் தொடங்கினார்.
முதல் புகாருக்குரிய காரணம், அப்பெண்மணி இரவு நேரங்களில் தொழ ஆரம்பித்தால் முதல் இரண்டு ரக்அத்திலோ அல்லது முதல் ரக்அத்திலோ பெரிய இரண்டு சூhவை ஓதுகிறார். (தொழுது முடித்து விட்டு படுக்கைக்கு வருவதற்கு மிகத் தாமதமாகிறது என்ற போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவு நேரங்களில் ஒரு அத்தியாயத்தையோ அல்லது இரண்டு சிறிய அத்தியாயங்களையோ ஓதுமாறு அப்பெண்மணிக்கு கட்டளையிட்டார்கள்.
இரண்டாவது புகாருக்கு அப்பெண்மணி தொடர்ந்து நோன்பு வைக்கிறார். நானோ வாலிபனாக இருக்கிறேன். எனக்கு பொறுமை இழந்து விடுகிறது என்று அவர் கூறிய போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கணவன் அனுமதியின்றி நஃபிலான நோன்புகளை மனைவி நோற்கக் கூடாது என்று கட்டளையிட்டார்கள்.
மூன்றாவது புகாருக்குரிய காரணமான ஸஃப்வான் பின்வருமாறு கூறினார். நான் பெரிய குடும்பத்துக்காரன் என்பதை நீங்களே அறிவீர்கள். இரவில் அதிகநேரம் விவசாயத்திற்கு நீர் பாய்ச்சுவதால் அதிகாலை எழுந்து நிற்க முடிவதில்லை என்ற போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஃப்வானே! எப்பொழுது விழிக்கிறாயோ (உடன்) தொழுது கொள் என்றார்கள்.” (நூல்: இப்னுமாஜா) அதேசமயம் அதையே வழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது என்று வேறு பல நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.
மனைவிக்குரிய கடமைகள் :
ஹக்கீம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் தந்தையின் வாயிலாக அறிவிக்கிறார்கள். ”யாரசூலுல்லாஹ்! எங்களது மனைவியர்களுக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமை என்ன?” என்று கேட்டேன். (அப்போது) ஐந்து விஷயத்தைப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
1) நீ சாப்பிடுவதை அவளுக்கும் சாப்பிடக் கொடு.
2) நீ உடுத்துவதைப் போன்று அவளுக்கும் உடுத்தக் கொடு.
3) அவள் முகத்தில் அடிக்காதே.
4) அருவெறுப்பான் வார்த்தைகளை உபயோகப்படுத்தாதே.
5) வீட்டிலேயே தவிர வேறெங்கும் அவளைத் தனிமைப்படுத்தாதே. (நூல்: இப்னுமாஜா)
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : உங்களில் யாரும் தன் மனைவியை அடிமையை அடிப்பதைப் போன்று (கசையால்) அடித்து விட வேண்டாம். ஏனெனில் பகலின் இறுதியில் அவளோடு அவர் சேர்ந்து விடுவார். (நூல்: புகாரீ)
அவ்வாறே தன் மனைவியின் தேவையையும், ஆசையையும், அவளது கண்களைப் பார்த்தே நிறைவேற்றுபவனே சிறந்த குடும்பத் தலைவனாக கருதப்படுகிறான்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு பயணத்தில் இருந்தேன். அப்போது எனக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் ஓட்டப் பந்தயம் நடந்தது. அதில் நான் வெற்றி பெற்று விட்டேன். (சில காலம் கழிந்து) நான் சதைப் பிடிப்பாக இருந்த போது மறுபடியும் போட்டி நடந்தது. அதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெற்றி பெற்றார்கள். போட்டிக்குப் பின்பு இந்த வெற்றி முந்தைய வெற்றிக்குச் சமமாகி விட்டது என்றார்கள். (நூல்: அபூதாவூது)
மேலும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள் : நான் என் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அனைவரும் ஓடி விட்டார்கள். அதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைவரையும் திரும்ப அழைத்து வந்து என்னுடன் விளையாடச் சொன்னார்கள். (நூல்: புகாரீ)
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் விளையாட்டின் மீது கொண்டிருந்த ஆர்வமிகுதியால் பள்ளி வளாகத்தில் அபஸ்ஸாவின் வீரர்கள் செய்த போர்ப் பயிற்சியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அனுமதியோடு ஜன்னல் வழியாகப் பார்த்தார்கள். (நூல்: புகாரீ)
ஹுனைன் அல்லது தபூக் போருக்குப் போய் வரும் போது ஓரிடத்தில் தங்க நேரிட்டது. அச்சமயம் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இறக்கை முளைத்த குதிரை வைத்து விளையாடினார்கள். (அபூதாவூத்) இவ்விதமாக மனைவியர்களின் மனநிலைக்கும் வயதிற்கும் ஏற்ற சிறந்த கணவராக தம்மை உருவகித்தது போல வேறு எந்த உலகத் தலைவரும் வாழ்ந்ததாக வரலாறில்லை. அத்தகுதியால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் பின்வரும் பிரகடனத்தை அறிவிக்கின்றார்கள்.
உங்கள் குடும்பத்திற்கு யார் சிறந்தவரோ அவர் தான் உங்களில் சிறந்தவர். நான் என் குடும்பத்திற்கு சிறந்தவராக இருக்கிறேன். (நூல்: இப்னுமாஜா)
கணவன் மனைவி இருவருக்குமிடையில் மனம் விட்டுப் பேசாமல் இறுக்கமாக இருப்பதனால் தான் சிறிய பிரச்னைகள் பூதகரமாகி விடுகிறது.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடத்தில் கூறினார்கள் : நீ என் மீது கோபமாக இருக்கிறாயா? அல்லது சாந்தமாக இருக்கிறாயா? என்று எனக்குத் தெரியும். அப்போது நான், அதை எப்படி தெரிந்து கொள்வீர்கள்? என்று நான் கேட்ட போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : நீ என்மீது சாந்தமாக இருந்தால், முஹம்மதுடைய இறைவன் மீது சத்தியமாக என்று (பேச்சுவார்த்தையில்) கூறுவாய். என்மீது கோபமாக இருந்தால் இப்ராஹீமுடைய இறைவன் மீது சத்தியமாக என்று கூறுவாய். அப்போது நான் கூறினேன், ஆம் யாரசூலுல்லாஹ். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை பெயரைத் தவிர வெறொன்றையும் (கோபத்தின் போதும்) நான் துறக்கவில்லை. (நூல்: புகாரீ)
கணவனுக்குரிய கடமை :
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : பெண்களில் சிறந்தவர் யார்? என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவளைப் பார்த்தால் கணவன் சந்தோஷமடைய வேண்டும். ஏதாவது வேலை செய்யச் சொன்னால் உடனே நிறைவேற்றுவாள். தன் உடலால் மோசடி செய்ய மாட்டாள். கணவன் வெறுக்கும் விதமாக பொருட்களை வீண் விரையம் செய்ய மாட்டாள். (நூல்: நஸஈ)
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்சாரித் தோழர்களுடனும், முஹாஜிர்களுடனும் அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒரு கோவேறுக் கழுதை வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸஜ்தா செய்தது. அப்போது தோழர்கள் கேட்டார்கள், யாரசூல்லாஹ், மிருகங்கள், மரங்கள் கூட உங்களுக்கு ஸஜ்தா செய்கிறது. அவற்றை விட நாங்கள் தானே உங்களுக்கு ஸஜ்தா செய்யத் தகுதி உடையவர்கள் என்ற போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வையே வணங்குங்கள். உங்கள் தோழரான என்னைக் கண்ணியப்படுத்துங்கள். உலகில் மனிதருள் யாருக்காவது ஸஜ்தா செய்ய நான் அனுமதிப்பதாக இருந்தால் மனைவியை கணவனுக்கு ஸஜ்தா செய்யுமாறு ஏவியிருப்பேன் என்றார். (நூல்: அஹ்மது)
சிரம் தாழ்த்துவது என்பது தான் பணிவின் உச்சகட்ட செயலாகும். அதையே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனைவியை கணவனுக்கு செய்ய ஏவியிருப்பேன் என்று கூறியிருப்பதன் மூலம் அதிகபட்சமான பணிவு காட்டுமாறு மனைவியருக்கு கட்டளையிடுகிறார்கள். அதற்காக மனைவியர்களை அடிமைப்படுத்துவது என்பது அர்த்தமாகாது. மனைவியை கணவன் மதிப்பதும், கணவனுக்கு மனைவி பணிவதும் தான் குடும்ப உறவின் மகத்தான புனிதமாகும். அதற்கொப்ப நம் குடும்ப வாழ்க்கை அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக..!

Wednesday 11 April 2012

விமானம் பறப்பது எப்படி?



இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்
பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்
சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…
இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது
ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு
A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)
B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust
C கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight
D பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag
ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்
Weight=Lift
Drag=Thrust
த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்
டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்
விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்
விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்
சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,
அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.
(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)
விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்
பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது
எலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேகிருக்கும் விசிரியால் வருகிரது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்
உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக
விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது
விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்
இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது
காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)
விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்
அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்
இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?
அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது)
இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது

விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?
அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது
ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது
மனிதனால் பறக்க முடிவும் என்பது பற்றி இறைவன் திருமறையில்…
மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்) அல்குர்அன் 55-33

Thanks: Tntj.net



கிரகங்கள் என்ன செய்யும்?



கிரகங்கள் நம்மை பாதிக்கிறது உண்மைதான். பூமி சுத்தறதால தான் இரவு பகல், பருவ காலம்,நில நடுக்கம் சுனாமி எல்லாம். சூரியனாலதான் உலகத்துக்கு எல்லா சக்தியும் கிடைக்குது. ஆனா பில் கேட்ஸ் ஆறதுக்கு அம்பானியாறதுக்கும் கிரகம் தான் காரணம்னு சொன்னா எப்படி? தனிப்பட்ட ஒரு மனிதன் வாழ்வில் கிரகங்கள் உண்டாக்கும் மாற்றம் பற்றிய அடிப்படையில்லாத பழைய ஜோதிடக் கருத்துகளும், பிழைப்புக்காக அதை விடாப்பிடியாக பரப்பி ஒரு கூட்டம் மக்களை இருட்டில தள்ளுறது தான் வருத்தமான விஷயம்.
வானத்துல கிரகங்களும் நட்சத்திரங்களும் தனியாக அது பாட்டுக்கு சுற்றிக் கொண்டிருப்பது போல தெரிந்தாலும் ஒரு கடிகாரத்தின் பற்சக்கரங்கள் போல கண்ணுக்குத் தெரியாத ஈர்ப்பு சக்தியால் கை கோர்த்துக்கொண்டு தான் சுற்றுகின்றன.  துணைக்கோள்கள் கோள்களை சுற்றுகின்றன. கோள்கள் சூரியனை சுற்றுகின்றன. எல்லாம் சேர்ந்தது தான் சூரிய மண்டலம். சூரிய மண்டலத்தின் சக்தி ஆதாரமே சூரியன் எனும் நட்சத்திரம் தான். கிரகங்களுக்கு சுய சக்தி கிடையாது.
இது போல் சூரியனுடன் சேர்த்து கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் ஒரு பெரிய சக்தி மையத்தை சுத்தி வருது. இதை பால் வெளி(milky way) ங்கிற கேலக்ஸி என்கிறோம். இது போல பல்லாயிரம் கேலக்ஸிகள் பிரபஞ்ச மையத்தை சுத்துது. இது நா சொல்லலே NASA சொல்லுது.
வானத்தை அண்ணாந்து பாத்தா தெரியற நட்சத்திர கூட்டங்களை இந்த ஜோதிடர்கள் பன்னிரெண்டு ராசியா பிரிச்சு அடுக்கிட்டாங்க. இந்த ராசிங்க எந்த ஷேப்ல அன்னிக்குள்ள ஆளுங்களுக்கு தெரிஞ்சுதோ அதுக்கேத்த மாதிரி ஆடு மாடுன்னு எல்லாம் பேர வச்சுகிட்டாங்க. அதுக்கப்புறம் ஒவ்வொரு நட்சத்திரங்களை கூட இது ஆம்பளை நட்சத்திரம் இது பொம்பள நட்சத்திரம் இது ‘அலி’ன்னு நுணுக்கமா பாத்து கண்டு பிடிச்சிட்டாங்க. விட்டாங்களா? அதுக்கு ஜாதி வேண்டாமா? குரு சுக்கிரன் பிராமணராகவும், சூரியன், செவ்வாய் சத்திரியனாகவும், சந்திரன், புதன், வைசியனாகவும், சனி சூத்திரனாகவும், இவைகளுக்கு தனித்தனி மொழிகளையும் தந்திரமா வகுத்து வச்சிட்டாங்க. அதோட ஒருத்தன் பொறந்த ராசி எதுவோ அதுங்கணக்கா குணமும் இருக்குமாம். மாட்டு ராசின்னா மாட்டு குணம். எப்பூடி? தராசு போல இருக்கிற துலாம் காரங்க நீதிபதியாக சான்ஸ். டாக்ட்ருக்கு சிரிஞ்ச் ராசி இருக்காண்ணு கேட்காதீங்க.
ஒரே ராசியில இருக்கிற நட்சத்திரமெல்லாம் ஒரு இடத்திலா இருக்கு?  இல்லை ஒன்னுகொண்ணு பல்லாயிரம் ஒளிவருச தூர வித்தியாசம் இருக்கு. தூரத்தில வர்ர ஆளையும் ரொம்ப ரொம்ப தூ……ரத்துல வர்ர ஆளையும் ஒரே திசையில பார்த்தா அப்பாவும் புள்ளையின்னா சொல்ல முடியும். ஆனா ஒரே ராசியா சொல்றாங்களே.
பூமத்திய ரேகையிலிருந்து பார்க்கும் போது நட்சத்திரங்கள் நேராக நகரும் பூமியின் அச்சான துருவங்கள்ள இருந்து பார்த்தா அது சுத்துவது போலிருக்கும். அதாவது நமக்கு சூரியன் சுள்ளென்று நடுமண்டைய தடவிக்கிட்டு கிழக்கே இருந்து மேக்கால போகும். ஆனா துருவத்துல நாய்குட்டி மாதிரி தொடு வானத்துல சுத்தி சுத்தி வரும். இதனால நிலநடுக்கோட்டுக்கு வடக்கே அலாஸ்க்கா, நார்வே, பின்லாந்து, கிறீன்லாந்து போன்ற நாடுகளில் சோசியம் வேலை செய்யாது. காரணம் பகல் இரவுகள் பல கிழமைகள் பல மாதங்கள் தொடர்ச்சியாக நீடிக்கிறது. இதனால் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அடிவானத்தில் 2 மணிநேரம் ஒரு இராசி என எழும் இராசி மண்டலங்களையும் கோள்களையும் பார்க்க முடியாது. இதனால் சோதிடத்தின் அடித்தளமே ஆடிப்போய் விடுகிறது.
ஜோதிடர்கள் நம் வானத்த பார்த்து தான் தான் கிரக அமைப்பை கணிக்கிறார்கள். அதனால் மற்ற கிரகங்க்ளோடு பூமியும் சூரியனை மையமாக சுற்றுகிற உண்மையை மறந்து விடுகிறர்கள். உதாரணமாக ஜன்னல் வழியே வெளியே பார்க்கும் போது எந்த வாகனம் எந்த திசையில் நம்ம்மைக் கடந்து செல்கிறது என்று குறிப்பெடுத்து கொள்கிறோம். ஆனால் நாம் இருப்பது ஒடிக் கொண்டிருக்கும் ஒரு வாகனமாக இருந்தால் அந்த குறிப்பில் என்ன பயன்? இப்போது சொல்லுங்கள் நம் ஜோதிடக் கணக்கு எந்த அளவு உண்மையாக இருக்குமென்று.
நல்லதோ கெட்டதோ நேரடியாக நம்மை அதிகம் பாதிப்பது சூரிய சக்தி அதாவது நம்ம ஸ்டேட் கவர்ண்மென்ட் மாதிரி (ஸ்.. கண்டிப்பாக பாலிடிக்ஸ் இல்லை) அப்புறம் மில்கிவே செண்ட்ரல் கவர்ன்மென்ட் மாதிரி. மற்ற நட்சத்திரங்கள் எல்லாம் பக்கத்து ஸ்டேட் மாதிரி.  முல்லை பெரியாறு, காவிரி போன்ற பெரிய பிரச்சனையெல்லாம் கிளப்பாது. கிளப்பினாலும் ஜோசியத்துக்கு உதவாது காரணம் நமக்கு பக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஒளியே நம்மை அடைய 50 ஒளி வருசம் ஆகும் அதாவது நாம் பொறக்கிறப்ப உள்ள நட்சத்திர பலன் ரிடையர்ட ஆகும் போது தான் வரும். ஓர் ஒளி ஆண்டு தூரம் கிட்டத்தட்ட 9.5 லட்சம் கோடி கிலோ மீட்டர் தூரமாகும். கணக்கு போட்டு பாருங்க நம்ம வாழ்கைய பாழாக்கிறதுக்கு இவ்வளவு தூரத்திருந்து ட்ராவல் பண்ணி ஆள் வரணுமா? நாமளே போதாது? டீடெய்லா வேணும்னா இங்கே பாருங்க. http://en.wikipedia.org/wiki/List_of_nearest_stars
கோளகள் ஒவ்வொரு ராசி மண்டலங்களா சும்மா போய ரெஸ்ட் எடுத்திகிட்டு சுத்திகிட்டு இருக்காம். நட்சத்திரங்கள் இருக்கிறது பல நூறு அல்லது ஆயிரக்கணக்கான ஒளி வருசங்களுக்கு அப்பால இதில சந்திரன் பூமித்தாய் முந்தானைய பிடிச்சுட்டு சுத்துது மத்த கிரகங்கள் தேமேன்னு அது பாடுக்கு சூரியனை சுத்துது . இது எப்போ விருந்துக்கு போச்சு. அதெல்லாம்இல்ல இந்த கிரகங்கள் அந்த ராசிகள்ள இருந்து வர்ற சக்திய ரிப்ளெக்ட் பண்ணுதாம் அதை தான் இப்படி சொல்றாங்களாம். இருக்கட்டும் இருக்கட்டும். அப்போ பக்கத்தில சூரியன் இருந்துகிட்டு நடு மண்டைய பொளக்கிறதே இதும் சக்தியும் எங்கியோ இருந்து வரும் துக்கினியூண்டு நட்சத்திர சக்தியும் ஒண்ணா?
ஜோதிடத்தில் எல்லா கோள்களையும் கணக்கில் எடுப்பதில்லை ஆனால் சூரியனை சந்திரனை மட்டுமல்ல ராகு கேது இல்லாத கிரகத்தையும் சேர்த்துக் கொள்கிறார்கள்.நிஜ கிரகத்துக்கும் இதுக்கு சம்பந்தமில்லை கண்ணுக்கு தெரியாத சக்தி மண்டலங்களைத்தான் கணக்கில் கொள்கிறோம்னு சொன்னாலும், அதை கணக்கில் எடுக்காத அறிவில தரும் வானியல் தகவலகளக் கொண்டு தான் பஞ்சாங்கள் திருத்தி வெளியிடுகிறர்கள்.
ஒரு வாதத்துக்கு இதையெலாம் சரின்னு வச்சாலும் எல்லா மக்களையும் ஒண்னா தானே கிரகம் புடிக்கணும்?.ஏன் ஒவ்வொருத்தனையும் ஒவ்வொரு மாதிரி போட்டு தாக்குது?அது அவிங்க அவிங்க பொறந்த நேரமாம். அந்த நேரத்து கிரகங்க பொஸிசன் எப்படி இருக்கிறத கட்டங்களா வரைஞ்சு வச்சு அது தான் ஜாதகம் . ஆனா இந்த கவுண்ட் டவுன் ஏன் குழந்தை பிறந்ததும் ஸ்டார்ட் ஆகுது ? எப்படி அது தனிப்பட்ட் வாழ்வில் பாதிக்கிறது என்பது யாருக்கு தெரியும்.
நியாயப்படி குழந்தை பிறக்கிறதுக்கு ஒன்பது மாசத்துமுன்னே தனி உயிராக தோன்றி விடுகிறது. முதல் செல் தனக்கே உரிய குரோம்சோம்கள் ஜீன் அமைப்புகளோடு உருவாகும் போது அது தனி உயிர் ஆகி விடுகிறது. வயித்தில இருக்கிற குழந்தை இந்த உலகத்தில் இல்லையா? கிரகங்கள் பாதிக்காதா? நண்பன் சொல்றான் கல்யாண டேட்டை வச்சு கணிச்சாதான் சரியா வருமாம். ஏன்னா அதுக்கப்புறம் கிரக பாதிப்பு கடுமையா இருக்காம்.
பிற கிரகங்களின் ஈர்ப்பு விசை ஒன்றுமே இல்லை எனும் அளவு பூமியின் ஈர்ப்பு விசை தான் அதிகம் பாதிக்கிறது. ஆனா காலடியில இருக்கிற பெரிய பூமிக்கிரகம் பத்தி ஜோதிடம் கண்டுகொள்ளவில்லை. ஏன்? ஹையித்தி மக்களை அந்த கிரகம் விழுங்கப் போறதை ஏன் அறிய முடியல? நட்சத்திரங்களின் ரேடியேசன் பாதிக்கிறது என்றால் அதை விட மிக மிக அதிகமான ரேடியசனை சூரியன் சுள்ளென்று தருகிறது .
சோதிட முறைகளிலெயே பல வகை இருக்கிறது. அதுவே ஒன்றையொன்று பொய்யாக்கிடுது. பலன் சொல்றதுக்கு இதுல நெறய கணக்குகள் சிஸ்ட்மெல்லாம் இருக்கு மெனக்கெட்டு எல்லாம் எல்லாம் படிச்சா எப்படி வேணும்னாலும் பலன் சொல்லலாங்கிற அளவு தெளிவாய் குழப்பியிருப்பாங்க.
Thanks: Chittarkottai.com

குர்ஆனில் சிலந்தியின் வீடு


குர்ஆன் கூறும் சிலந்தியின் வீடு ஓர் அறிவியல் அற்புதம்

அய்னுஷ்-ஷம்ஸு பல்கலைக்கழகத்தின் விவசாயக்கல்லூரியில் பணியாற்றும் பூச்சிகள் தாவரவியல் துறைப் பேராசிரியர் டாக்டர் அல்யம்மீ பின்வரும் தகவலைக் கூறுகிறார்:-
குர்ஆனில் அல்லாஹ் சிலந்தியை உதாரணமாகக் கூறுகிறான்.

مَثَلُ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ أَوْلِيَآءَ كَمَثَلِ ٱلْعَنكَبُوتِ ٱتَّخَذَتْ بَيْتاً وَإِنَّ أَوْهَنَ ٱلْبُيُوتِ لَبَيْتُ ٱلْعَنكَبُوتِ لَوْ كَانُواْ يَعْلَمُونَ

அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது; அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது; ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் – இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்).
இந்த வசனத்தில் இத்தகதத் பைத்தன் (اتخذت بيتا ) ‘ அது வீட்டைக் கட்டியது’ என்று இறைவன் ஆண்பாலில் துவங்கி ‘கட்டியது’ என்ற வினைச்சொல்லை பெண்பாலில் கூறியுள்ளான். இலக்கண மரபுப்படி ஆண்பாலுக்குப்பிறகு பயனிலையை ஆண்பாலாகத்தான்; கூறவேண்டும். ஆனால் இங்கே பெண்பாலாகக் கூறியதைப் பார்க்கும் போது இலக்கணப்பிழையாகத் தோன்றலாம்.
இது மனிதன் இயற்றிய சொல்லாக இருந்தால் இலக்கணத்தில் தவறு நிகழ்ந்ததாக நினைத்து விட்டுவிடலாம். ஆனால் உலகின் அனைத்து உயிரினங்களையும் படைத்த இறைவன் அன்கபூத்தைப் பற்றிக் கூறும்போது அவனது சொல்லில் இலக்கணத்தவறு நிகழமுடியாது. அவ்வாறு அவன் கூறியிருந்தால் ஏற்கத்தக்க காரணங்கள் நிச்சயம் இருக்கவேண்டும் என ஆய்வு தொடர்ந்தது.
அவை என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.
1. அன்கபூத் என்ற சொல் இலக்கண மேதைகளால் ஆண்பாலிலும் பெண்பாலிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஆண்பால் அன்கப் என்பதாகும். அன்கபூத் என்பது ஆண், பெண் இனத்தையே குறிக்கும் பொதுவான சொல்லாகும். ஆகவே இதில் இலக்கணத் தவறு நிகழவில்லை.
2. அன்கபூத்: ஆண் பெண் சிலந்தியில் ஆண் சிலந்தி வலை பின்னாது. பெண் சிலந்தி மட்டும் தான் அதன் வலையைப் பின்னமுடியும்; என்று இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறியுள்ளனர். காரணம் அதன் உடல் அவ்வாறு படைக்கப்பட்டுள்ளது.அதன் அடிவயிற்றில் பசைபோன்ற திரவம் வெளியாகிறது. மாததந்திர ருது போன்ற ஒரு செயல் அதில் நிகழ்கிறது.
3. பெண்சிலந்தி பருவ வயதை அடையும் போது தனது உறவுக்காக இவ்வாறு வீட்டை எழுப்புகிறது. ஆண் சிலந்தி வலிமை பெற்றிருந்தும்; அதனால் வீடு கட்ட முடியாது.
4. பெண் சிலந்தியின் வயிற்றில் உற்பத்தியாகும் நூலில் பசை இருக்கும். ஏதிரிப் பூச்சிகள் அதன் மீது வந்தமர்ந்தால்; அதில் அவை ஒட்டிக் கொள்ளும். அவை அதற்கு உணவாக ஆகிவிடுகிறது.
எனவே வலைபின்னும் இச்செயல் பெண் இனத்தில் தான் நிகழ முடீயும் என்பதால் தான் அல்லாஹ் பெண்பாலில் கூறியுள்ளான்.
1400 ஆண்டுகளுக்கு முன் பெண் இனம் தான் வலை பின்னும் என்பது எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு எவ்வாறு தெரிந்திருக்க முடியும்? ஆகவே சிலந்தியைப் படைத்த இறைவன் தான் இந்த பேருண்மையை உலகுக்குக் கூற முடியும்.ஆகவே இறைவனின் வேதமான அல்-குர்ஆன் அல்லாஹ்வின் அருள்மறை என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.
Thanks: Chittarkottai.com


Tuesday 10 April 2012

The Perfect 99 Names of Allah Ta'ala


The Explanation of The Perfect 99 Names of Allah Ta'ala

Praise be to Allah, the Lord of the worlds. May Allah raise the rank of our master Muhammad (sallallahu 'alahi wasallam) and his Ahl and Companions and protect his nation from that which he fears for it.
"He is Allah (God), the Creator, the Originator, The Fashioner, to Him belong the most beautiful names: whatever is in the heavens and on earth, do declare His praises and Glory. And He is the Exalted in Might, The Wise. (Quran 59:24)
"The most beautiful names belong to Allah (God): so call on Him by them;..." (Quran 7:180)


Thereafter:
1. Allah
The One Who has the Godhood, which is the power to create the entities

2. Ar-Rahman
The One Who has an abundance of mercy for the believers and the blasphemers in this world and exclusively for the believers in the Hereafter.

3. Ar-Rahim
The One Who has an abundance of mercy for the believers.

4. Al-Malik
The One with absolute Dominion, and the One Whose Dominion is clear of imperfection.

5. Al-Quddus
The One Who is pure from any imperfection and clear of children and adversaries.

6. As-Salam
The One Who is clear of every imperfection.

7. Al-Mu'min
The One Who witnessed for Himself that no one is God but Him; and Who witnessed for His believers that they are truthful in their belief that no one is God but Him.

8. Al-Muhaymin
The One Who witnesses the saying and deeds of His creatures.

9. Al-^Aziz
The Defeater Who is not defeated.

10. Al-Jabbar
The One for Whom nothing happens in His dominion except what He willed.

11. Al-Mutakabbir
The One Who is clear of the attributes of the creatures and of resembling them.

12. Al- Khaliq
The One Who brings everything from non-existence to existence.

13. Al-Bari'
The Creator Who has the Power to turn the entities from one state to another.

14. Al-Musawwir
The One Who forms His creatures in different pictures.

15. Al-Ghaffar
The One Who forgives the sins of His slaves time and time again.

16. Al-Qahhar
The Subduer Who has the perfect Power and is not powerless over anything.

17. Al-Wahhab
The One Who is Generous in giving plenty without any return.

18. Ar-Razzaq
The One Who makes the Sustenance reach His slaves. Sustenance is everything that benefits, whether halal or haram.

19. Al-Fattah
The One Who opens for His slaves the closed worldly and religious matters.

20. Al-^Alim
The Knowledgeable; the One for Whom nothing is hidden from His Knowledge.

21-22. Al-Qabid, Al-Basit
The One Who constricts the sustenance by His Wisdom and expands and widens it with His Generosity and Mercy.

23-24. Al-Khafid, Ar-Rafi^
The One Who lowers whomever He willed by His Destruction and raises whomever He willed by His Endowment.

25-26. Al-Mu^izz, Al-Mudhill
The One Who gives esteem to whomever He willed; hence there is no one to degrade him. The One Who degrades whomever He willed; hence there is no one to give him esteem.

27. As-Sami^
The One Who Hears all things that are heard by His Eternal Hearing without an ear, instrument, or organ.

28. Al-Basir
The One Who Sees all things that are seen by His eternal Sight without a pupil or any other instrument.

29. Al-Hakam
He is the Ruler, and His judgment is His Word.

30. Al-^Adl
The One Who is entitled to do what He does.

31. Al-Latif
The One Who is kind to His slaves and endows upon them.

32. Al-Khabir
The One Who knows the truth of things.

33. Al-Halim
The One Who delays the punishment for those who deserve it and then He might forgive them.

34. Al-^Adhim
The One deserving the attributes of Exaltment, Glory, Extolement, and Purity from all imperfection.

35. Al-Ghafur
The One Who forgives a lot.

36. Ash-Shakur
The One Who gives ample reward for a little obedience.

37. Al-^Aliyy
The One Who is clear of the attributes of the creatures.

38. Al-Kabir
The One Who is greater in status than everything.

39. Al-Hafidh
The One Who protects whatever and whomever He willed to protect.

40. Al-Muqit
The One Who has the Power.

41. Al-Hasib
The One Who gives the satisfaction.

42. Al-Jalil
The One Who is attributed with greatness of Power and Glory of status.

43. Al-Karim
The One Who is clear of abjectness.

44. Ar-Raqib
The One from Whom nothing is absent. Hence its meaning is related to the attribute of Knowledge.

45. Al-Mujib
The One Who answers the one in need if he asks Him and rescues the yearner if he calls upon Him.

46. Al-Wasi^
The Knowledgeable.

47. Al-Hakim
The One Who is correct in His doings.

48. Al-Wadud
The One Who loves His believing slaves and His believing slaves love Him. His love to His slaves is His Will to be merciful to them and praise them: Hence its meaning is related to the attributes of the Will and Kalam (His attribute with which He orders and forbids and with which He spoke to Muhammad and Musa. It is not a sound, nor a language, nor a letter)

49. Al-Majid
The One Who is with perfect Power, High Status, Compassion, Generosity, and Kindness.

50. Al-Ba^ith
The One Who resurrects His slaves after death for reward and/or punishment.

51. Ash-Shahid
The One from Whom nothing is absent.

52. Al-Haqq
The One Who truly exists, i.e., the One Whose Existence is confirmed.

53. Al-Wakil
The One Who gives the satisfaction and is relied upon.

54. Al-Qawiyy
The One with the complete Power.

55. Al-Matin
The One with extreme Power which is un-interrupted, and Who does not get tired.

56. Al-Waliyy
The Supporter.

57. Al-Hamid
The praised One Who deserves to be praised.

58. Al-Muhsi
The One Who knows the count of things.

59. Al-Mubdi'
The One Who started the human being, that is, He created him.

60. Al-Mu^id
The One Who brings back the creatures after death.

61. Al-Muhyi
The One Who took out a living human from seminal fluid that does not have a soul. He quickens the dead by giving the souls back to the decayed bodies on the Resurrection Day and He makes the hearts alive by the light of knowledge.

62. Al-Mumit
The One Who renders the living dead.

63. Al-Hayy
The One Who is attributed with a life that is unlike our life and is not that of a combination of soul, flesh, and blood.

64. Al-Qayyum
The One Who remains and does not end.

65. Al-Wajid
The Rich Who is never poor. Al­Wajd is Richness.

66. Al-Majid
The One Who is Majid.

67. Al-Wahid
The One without a partner.

68. As-Samad
The Master Who is relied upon in matters and is resorted to in one's needs.

69. Al-Qadir
The One Who is attributed with Power.

70. Al-Muqtadir
The One with the perfect Power from Whom nothing is withheld.

71-72. Al-Muqaddim, Al-Mu'akhkhir
The One Who puts things in their right places. He makes ahead whatever He wills and delays whatever He wills.

73. Al-'Awwal
The One whose Existence is without a beginning.

74. Al-'Akhir
The One whose Existence is without an end.

75-76. Adh-Dhahir, Al-Batin
The One above Whom nothing exists and underneath Whom nothing exists; hence He exists without a place. His Existence is obvious by proofs. He is clear of the delusions of bodily attributes.

77. Al-Wali
The One Who owns things and manages them.

78. Al-Muta^ali
The One Who is clear of the attributes of the creation.

79. Al-Barr
The One Who is kind to His creatures, Who covered them with His sustenance and specified whomever He willed among them by His support, protection, and special mercy.

80. At-Tawwab
The One Who grants repentance to whomever He willed among His creatures and accepts his repentance.

81. Al-Muntaqim
The One Who victoriously prevails over His enemies and punishes them for their sins. It may mean the One Who destroys them.

82. Al-^Afuww
The One with wide forgiveness.

83. Ar-Ra'uf
The One with extreme Mercy. The Mercy of Allah is His Will to endow upon whomever He willed among His creatures.

84. Malikul-Mulk
The One Who controls the dominion and gives dominion to whomever He willed.

85. Dhul-Jalal Wal-'Ikram
The One Who deserves to be Exalted and not denied.

86. Al-Muqsit
The One Who is Just in His judgment.

87. Al-Jami^
The One Who gathers the creatures on a day there is no doubt about, that is, the Day of Judgment.

88. Al-Ghaniyy
The One Who does not need the creation.

89. Al-Mughni
The One Who satisfies the necessities of the creatures.

90. Al-Mani^
The Supporter Who protects and gives victory to His pious believers.

91-92. Ad -Darr, An-Nafi^
The One Who makes harm reach to whomever He willed and benefit to whomever He willed.

93. An-Nur
The One Who guides.

94. Al-Hadi
The One with Whose Guidance His believers were guided, and with Whose Guidance the living beings have been guided to what is beneficial for them and protected from what is harmful to them.

95. Al-Badi^
The One Who created the creation and formed it without any preceding example.

96. Al-Baqi
The One for Whom the state of non-existence is impossible.

97. Al-Warith
The One Whose Existence remains.

98. Ar-Rashid
The One Who guides.

99. As-Sabur
The One Who does not quickly punish the sinners.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
And Allah Ta'ala Knows Best