Search This Blog

Sunday 4 September 2011

புலூகுல் மராம் – நபிமொழி தொகுப்பு -2


ஹதீஸ் : 7
“உங்களில் எவரும் ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழித்துவிட்டு, பின்னர் அதில் குளிக்க வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று புஹாரியில் இடம் பெற்றுள்ளது.


ஹதீஸ் : 8
“நபி(ஸல்)அவர்ர்கள் கூறினார்கள், குளிப்புகடமையாக இருக்கும் நிலையில் உங்களில் எவரும் 
தேங்கி நிற்கும் தண்ணீரில்(இறங்கி)குளிக்க வேண்டாம்”
நூல்கள்: முஸ்லிம், அபூ தாவூத்

ஹதீஸ் : 9
“கணவனால் மீதம் வைக்கப்பட்ட தண்ணீரில் மனைவியும், மனைவியால் மீதம் வைக்க்கப்பட்ட தண்ணீரில் கணவனும் குளிப்பதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.(தேவை ஏற்பட்டால்) இருவரும் சேர்ந்து அள்ளி அள்ளி குளித்துக் கொள்ளலாம்” நபி தோழர்களில் ஒருவர் அறிவிக்கின்றார்


நூல்கள்: அபூ தாவூத், நஸயீ
(ஹதிஸ் தரம்: இது ஆதரபூர்வமான ஹதிஸ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டது)


ஹதீஸ் : 10
“(உம்முல் முஃமினீன்) மைமூனா(ரலி) அவர்கள் குளித்து விட்டு எஞ்சிய தண்ணீரில் நபி(ஸல்) அவர்கள் குளித்தார்கள்” என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்
நூல்: முஸ்லிம்


ஹதீஸ் : 11
நபி(ஸல்)அவர்களது மனைவியரில் ஒருவர், ஒருபெரிய பாத்திரத்தில் குளித்தார். அப்போது அங்கு வந்த நபி(ஸல்) அவர்கள் அதில் குளிக்க விரும்பியபோது, “நான் நிச்சயமாக குளிப்பு கடமையானவளாக இருந்தேன்”என்று நபி(ஸல்) அவர்களுடைய மனைவி கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள்,”(இதன் காரணமாக)தண்ணீர் ஒருபோதும் அசுத்தமாகாது” என்று கூறினார்கள்.
நூல்கள்: அபூதாவூத், நஸயி, இப்னுமாஜா, திர்மிதி
(ஹதீஸ் தரம்: இதை திர்மிதீ, இப்னு குஸைமா ஆகியோர் ஆதாரப்பூர்வமான ஹதிஸ் என்று குறிப்பிடுகின்றனர்)


ஹதீஸ் : 12
“உங்களுடைய பாத்திரத்தில் நாய் வைத்துவிட்டால், அதை(சுத்தப் படுத்துவதற்காக)
ஏழு முறை கழுவுங்கள். அதில் முதல் முறை மண்ணால் சுத்தம் செய்யுங்கள்” ” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபு ஹூரைரா(ரலி)
நூல்கள்: முஸ்லிம்
(ஹதிஸ் தரம்: முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், அதிலுள்ளதை கொட்டிவிடுங்கள் என்று உள்ளது. திர்மிதியின் மற்றோர் அறிவிப்பில், முதல் முறை அல்லது கடைசி முறை மண்ணால் கழுவுங்கள் என்று உள்ளது)


 ஹதீஸ் : 13
நபி(ஸல்) அவர்கள்ப் பூனையை பற்றி கூறும் போது, “அது அசுத்தமானதல்ல, உங்களிடையே சுற்றி வரக்கூடியதுதான்” என்று கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூ கதாதா(ரலி)
நூல்கள்: அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா


ஹதீஸ் : 14
ஒரு நாட்டுபுறத்தார் பள்ளிக்கு வந்து பள்ளியின் ஒரு பகுதில் சிறுநீர் கழித்துவிட்டார். மக்கள் அவரை அதட்டினார்கள்.அதை நபி(ஸல்) அவர்கள் தடுத்து அவர் சிறுநீர் கழித்து முடித்த பின்னர் ஒரு வாளி தண்ணீர் கொண்டு வருமாறு கட்டளை இட்டார்கள். அது அதன் மீது ஊற்றப் பட்டது.என்று அனஸ் இப்னு மாலிக் (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்
நூல்கள்: முஸ்லிம், புகாரி


ஹதீஸ் : 15
“செத்தவை இரண்டும், இரத்தம் இரண்டும் நமக்கு உண்ண(ஹலால்) அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் செத்தவை வெட்டுகிளி மற்றும் மீனாகும்.. அந்த இரத்தம், ஈரல் மற்றும் கல்லீரல் ஆகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)
நூல்கள்: அஹ்மத், இப்னு மாஜா


ஹதீஸ் : 16
“உங்கள் குடிபானத்தில் ஈ விழுந்து விட்டால், அதை உள்ளே மூழ்கடித்துவிட்டு பின்னர் வெளியில் எறிந்து விடவும். ஏனெனில் அதன் ஒரு இறக்கையில் நோயும், மற்றோர் இறக்கையில் நிவாரணமும் உள்ளது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்கள்: புகாரி, அபூதாவூத்
(ஹதீஸ் தரம்: நிச்சயமாக அது நோயிருக்கும் தன்னுடைய இறைக்கியின் மூலம் தன்னை பாதுகாத்து கொள்கிறது என்று அபுதாவூத் இமாம் அதிகமாக அறிவித்துள்ளார்)


ஹதீஸ் : 17
“கால்நடைகள் உயிரோடு இருக்க அவற்றிலிருந்து வெட்டப்பட்ட உறுப்புகள் செத்தவையாக கருதப்படும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூவாஹித் அல்லைஸி(ரலி)
நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்
(ஹதீஸ் தரம் : இந்த ஹதீஸை இமாம் திர்மிதீ அவர்கள் ஹஸன் என்று குறிப்பிட்டுள்ளார்கள், இங்கு திர்மிதியின் வாசகம் இடம் பெற்றுள்ளது)
பாத்திரங்கள் பற்றிய பாடம்


ஹதீஸ் : 18
"தங்க பாத்திரங்களிலும் வெள்ளி பாத்திரங்களிலும் பருகாதீர்கள், இன்னும் தங்க, வெள்ளி தட்டுகளில் சாப்பிடாதீர்கள். ஏனெனில், அவை உலகில்(இறைமறுப்பாலர்களான)அவர்களுக்குரியதாகும். மறுமையில் உங்களுக்குரியதாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி)
நூல்கள்: புகாரி, முஸ்லிம்


ஹதீஸ் : 19
“எவர் வெள்ளி பாத்திரங்களில் பருகுகின்றாரோ அவரது வயிற்றில் நரக நெருப்பு குமுறிக்கொண்ண்டு இருக்கும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி)
நூல்கள்: புகாரி, முஸ்லிம்


ஹதீஸ் : 20
“தோல் பதனிடப்பட்டுவிட்டால் அது தூய்மையாகிவிடும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
நூல்கள்: முஸ்லிம்
ஹதீஸ் : 21
அபுதாவூத், திர்மிதீ, நஸயீ மற்றும் இப்னுமாஜாவில், “எந்தத் தோலானாலும் பதனிடப்பட்டுவிட்டால்(அது தூய்மையாகி விடும்)” என்று இடம் பெற்றுள்ளது.


ஹதீஸ் : 22
“இறந்து போன கால்நடைகளின் தோல்கள் பதனிடப்பட்டுவிட்டால் அது தூய்மையாகிவிடும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: ஸலமா இப்னு அல் முஹய்யிக்(ரலி)
(ஹதீஸ் தரம் : இப்னு ஹிப்பான் இதை ஸஹீஹ் ஆன ஹதீஸ் எனக்குறிப்பிட்டுள்ளார்)


ஹதீஸ் : 23
இறந்து போன ஆட்டை இழுத்து சென்றோரை நபி(ஸல்) அவர்கள் கடந்து சென்ற போது”அதனுடைய தோலை நீங்கள் எடுத்து கொள்ளலாமே?” என்று கூறினார்கள். அதற்கவர்கள் “அது தானாக செத்ததாயிற்றே” பதிலளித்தனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அதைத் தண்ணீர் மற்றும் ஆவாரம்பட்டை சுத்தம் செய்து விடும்” என்று கூறினார்கள் என மைமூனா (ரலி) அறிவிக்கின்றார்கள்
நூல்கள்: அபூதாவூத், நஸயீ


ஹதீஸ் : 24
“அல்லாஹ்வின் தூதர் அவர்களே! முன்னர் வேதம் கொடுக்கப் பட்டோரின் நாட்டில் நாங்கள் வசிக்கின்றோம். எனவே, அவர்களது பாத்திரங்களில் நாங்கள்  உண்ணலாம?” என்று நான் கேட்டேன். அதற்கு “அவற்றில் நீங்கள் உண்ணாதீர்கள், உங்களுக்கு வேறு பாத்திரங்கள் கிடைக்கவில்லையெனில், அவற்றை நன்கு கழுவிவிட்டு அவற்றில்  உண்ணுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூஸலபா அல் குஷனிய்யீ(ரலி)
நூல்கள்: புகாரி, முஸ்லிம்


ஹதீஸ் : 25               
“(இறைவனுக்கு) இணவைக்கும் ஒரு பெண்ணுடைய(தோல்) தண்ணீர் பையிலிருந்த தண்ணீரை கொண்டு நபி(ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் உளூ செய்தார்கள்” என இம்ரான் இப்னு ஹுசைன்(ரலி) அறிவிக்கின்றார்(நீண்ட ஹதீஸின் சுருக்கம்)
நூல்கள்: புகாரி, முஸ்லிம்


ஹதீஸ் : 26
நபி(ஸல்) அவர்களுடைய பாத்திரம் ஒன்று உடைந்து விட்டது. அவர்கள் ஓட்டை விழுந்த இடத்தில் வெள்ளித்துண்டினால் அடைத்தார்கள்” என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கின்றார்கள்
நூல்கள்: புகாரி, 

No comments:

Post a Comment